மோரை ஊராட்சி வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய வளாகம் திறப்பு விழா

மோரை ஊராட்சி வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-03-26 02:15 GMT

புதிய பள்ளி வளாகத்தை திறந்து வைத்த ஆட்சியர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சி, வீராபுரம் அரசு உயர்நிலை பள்ளியானது இடவசதி காரணமாக புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, வீராபுரம் பகுதியில் உள்ள அப்புதிய பள்ளி வளாகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், மாணவ-மாணவியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) விஜயானந்த், வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருண்குமார், வெங்கடேசன், ஆவடி வட்டாட்சியர் வெங்கடேசன், வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.தயாளன், மாவட்ட கவுன்சிலர் மோரை சதீஷ்குமார், மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன், வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலர்கொடி, மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் முதன்மை கல்வி அலுவலர் ராமன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கட்டிடம் விஜயநாத் வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மெட்ரிக் அருண்குமார் வெங்கடேசன் ஆவடி வட்டாட்சியர் வெங்கடேசன் மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆட்சியர்கள் மாணவ மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News