சோழவரம் அருகே நல்லூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

Road Work Construction- சென்னை சோழவரம் அருகே நல்லூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2022-08-04 04:15 GMT

சென்னை சோழவரம் அருகே நல்லூர் ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

Road Work Construction- திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சி 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேல்  ஒன்றிய குழு பொது நிதியிலிருந்து மருதபாண்டியர் நகர், நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ் தெருவிற்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் ‌பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடை பெற்றது.நிகழ்ச்சிக்கு சோழவரம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய  செயலாளருமான மீ.வே.கருணாகரன், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லிடில்லி, துணைத்தலைவர் செல்விபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய சிமெண்ட் சாலை பணிக்கான பூமி பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பணியை துவங்கி வைத்தனர். இதில் வார்டு உறுப்பினர் பாஸ்கரன், ஊராட்சி செயலர் லோகநாதன் ,கழக நிர்வாகிகள் சுகுமார், மோகன்ராஜ், சங்கர், ரவி உட்பட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News