சிறுவாபுரி முருகன் கோவில் மண்டபத்தில் இருந்த பாம்பால் அலறிய பக்தர்கள்

சிறுவாபுரி முருகன் கோவில் மண்டபத்தில் இருந்த பாம்பால் அலறிய பக்தர்கள்
X

கோவில் மண்டபத்தில் இருந்த பாம்பை லாவகமாக பிடிக்கும் தீயணைப்பு துறை வீரர்.

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு மண்டபத்தில் பாம்பு புகுந்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு மண்டபத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் அலறியடித்து ஓடினர். தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்ததால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மட்டும் இன்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.


அந்த வகையில் செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் பக்தர்களின் காத்திருப்பு மண்டபத்தில் மேற்கூரையில் பாம்பு ஒன்று இருந்ததை சில பக்தர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் பாம்பு பாம்பு என கூறிக்கொண்டே அலறியடித்து சிதறி ஓடினர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு துறை வீரர்கள் மின்விசிறியின் மேலே சுருண்ட படி இருந்த பாம்பை இடுக்கியின் உதவியுடன் லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து பாம்பை கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் விட்டனர். அதன்பின்னரே அங்கு சகஜ நிலை திரும்பியது.

Tags

Next Story
Similar Posts
பொன்னேரி அருகே உள்ள தேவத்தம்மன் கோவிலில் நாக சதுர்த்தி விழா கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி குதிரை ரேக்ளா பந்தயம், கபடி போட்டி
தீபாவளி செலவிற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கொலை:2 நண்பர்கள் கைது
வேலைக்கு செல்லாமல் இருந்ததை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு
திருவள்ளூரில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!
திருவள்ளூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திருவள்ளூரில் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி
நிலங்களை கையகப்படுத்துவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே ஊராட்சி தலைவரின் மகனை கைது செய்யக்கோரி தர்ணா
நடிகருக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: எர்ணாவூர் நாராயணன் பேட்டி
ஆவடி அருகே காரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
ai in future agriculture