தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
By - Magizh Venthan,Reporter |22 Sep 2021 2:27 PM GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று, புதியதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் மாவட்டத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது. இன்று, மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை. எனினும் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தம் 401 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu