பதறிய அமிதாப்..! அசால்ட் செய்த கமல்ஹாசன்..! கல்கியில் இப்படி ஒரு சம்பவமா?

பதறிய அமிதாப்..! அசால்ட் செய்த கமல்ஹாசன்..! கல்கியில் இப்படி ஒரு சம்பவமா?
கல்கி திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் பிரபாஸுடன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கல்கி படத்தின் புரமோசன் நேர்காணல் ஒன்றில் பேசிய அமிதாப், படத்தில் மேக்கப்புடன் நடிப்பது குறித்து சிலாகித்து பேசியுள்ளார் அமிதாப் பச்சன்.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே இத்தனை முறை பிராஸ்தட்டிக் மேக்கப் போட்டு இவ்வளவு கடுமையான வேடங்களை ஏற்று நடித்தவர் கமல்ஹாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள பிரபாஸின் கல்கி திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்துக்கான புரமோசனில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் கமல்ஹாசனைப் பற்றியே அனைவரும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வைஜெயந்தி பட நிறுவனத்தின் உரிமையாளர்களான இப்படத்தின் தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் கமல்ஹாசனின் வேடம் குறித்து சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட அமிதாப் பச்சன், பிராஸ்தெட்டிக் மேக்கப் எல்லாம் எவ்வளவு கடினம் தெரியுமா? 3 மணி நேரம் அமைதியாக உக்கார்ந்து மேக்கப் கலைஞர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், பின் அரை மணி நேரம் அதை கலைக்கும்போது அமர வேண்டும். இப்படி 20 , 25 நாட்கள் ஷூட்டிங் செய்வதெல்லாம் எவ்வளவு கடினமானது தெரியுமா என பேசிக்கொண்டிருந்தார். இதனை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த கமல்ஹாசன் மேடை நாகரிகம் கருதி எதையும் சொல்லவில்லை.

ஆனால் கமல்ஹாசன் ரசிகர்கள் தற்போது ஷங்கர் பேசியதையும், தசாவதாரம் படத்தில் அவர் போட்ட கெட்டப்களையும் எடுத்து எடிட் செய்து அதற்கு பதிலாக கொடுத்து வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தில், கமல்ஹாசனுடன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், பாபி சிம்ஹா, ஜெகன் என பலரும் நடித்திருக்கிறார்கள். விவேக் படப்பிடிப்பின்போதே இறந்துவிட்டதால், அவருக்கு ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் ரிகிரியேட் செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தியன் 2 படக்குழு பல விசயங்களைப் பேசியிருந்தது. அந்த சந்திப்பில் இயக்குநர் ஷங்கருடன் உலகநாயகன் கமல்ஹாசனும் பங்கேற்றிருந்தார். அவர்களுடன் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் பேசிய ஷங்கர், கமல்ஹாசன் குறித்து நெகிழ்ச்சியாக பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

விழாவில் பேசிய ஷங்கர் தெரிவித்த கருத்துக்கள் இதோ “நான் எப்போதுமே, கற்பனை ஒன்றை கலந்து இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து படமெடுப்பேன். கிட்டத்தட்ட பெரும்பான்மையான படங்களில் இதையேதான் வைத்திருப்பேன். அதன்படி, இன்றைய காலக்கட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தியன் 2. முதல் பாகமாக இந்தியன் படம் தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தியன் 2 தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தில், 40 நாட்கள் பிராஸ்தெட்டிக் மேக்கப் போட்டு கமல் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில், சுமார் 70 நாட்கள் சிறப்பு மேக்கப் போட்டு கமல் நடித்திருக்கிறார். இந்த மேக்கப் போட்டு நடிப்பது மிகவும் சவாலான பணி. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இதற்காக செலவிட வேண்டும். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போது, படப்பிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வந்து, கடைசி ஆளாக வீட்டுக்குச் செல்வார் கமல். இறுதி நேரம் வரை கமல்ஹாசன் மிகவும் அர்ப்பணிப்போடு நடித்தார்.

அதிகாலை 4 மணிக்கு மேக்கப் போட ஆரம்பித்து, காலை 7 மணிக்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தியாகவேண்டும். அப்படிப்பட்ட சூழலிலும் நடித்து கொடுத்தார் கமல்ஹாசன். இரவு பேக்கப் சொல்லியும் அனைவரும் சென்றாலும் கூடுதலாக ஒரு மணி நேரம் மேக்கப் கலைக்க கமல்ஹாசன் அமர வேண்டும். இப்படி மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்து கொடுத்தார் கமல்ஹாசன்.

முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவின் மேக்கப் கமல்ஹாசனின் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது. அது கொஞ்சம் கடினமான மேக்கப். இந்த அளவுக்கு டெக்னாலஜி அப்போது இல்லை. ஆனால், இந்த படத்தில், கமல்ஹாசனின் நடிப்பை முதல் பாகத்தில் இருந்ததை விட அதிகளவில் பார்க்க முடியும். இது மிகவும் லேசான மேக்கப் போன்று இருக்கும். முக பாவனைகளை படத்தில் காட்டமுடியும்.

இந்த படத்துக்காக ஒரு காட்சியில் 4 நாட்கள் கயிற்றில் தொங்கியபடியே நடித்தார் கமல். கயிற்றில் தொங்கியபடியே இந்த காட்சியில் நடிக்க வேண்டும். அதில் முகபாவனைகளும் காட்ட வேண்டும். பஞ்சாபி மொழி பேசி நடிக்க வேண்டும். அதை 2x வேகத்தில் படம்பிடித்து, பின் அதற்கு தகுந்தவாறு 2X வேகத்தைக் கூட்டி, அதை மேட்ச் செய்யும் விதமாக காட்சியை மறுபடி குளோஸப் நடிக்க வேண்டும். மொத்தம் 4 நாட்கள் காலை கயிற்றில் ஏறி, மாலை வரை நடித்து கொடுத்தார் கமல்ஹாசன் என்று கூறியுள்ளார் ஷங்கர்.

Tags

Next Story