சமுதாய தலைவர்களிடம் வாக்கு சேகரித்த ராதிகா..!

சமுதாய தலைவர்களிடம் வாக்கு சேகரித்த ராதிகா..!
X

அருப்புக்கோட்டையில் சமுதாய தலைவர்களிடம் ஓட்டு சேகரித்த ராதிகா, அவரது கணவர் சரத்குமார்.

நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் சமுதாய தலைவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா நேற்று அருப்புக்கோட்டையில் பல்வேறு சமுதாயத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

சாலியர் உறவின்முறை, நாடார் உறவின்முறை, அகமுடையார் உறவின்முறை, தேவாங்கர் உறவின்முறை, கள்ளர் மற்றும் மறவர் உறவின்முறை, செங்குந்த முதலியார் உறவின்முறை, ஜெயவிலால் குழுமம், செம்பட்டி முத்தரையர் உறவின்முறை, பாளையம்பட்டி முத்தரையர் உறவின்முறை நிர்வாகிகள், முக்கியஸ்தர்களை சந்தித்து நடிகை ராதிகா வாக்கு சேகரித்தார்.

அதைத்தொடர்ந்து, காமராஜர் சிலை, தேவர் சிலை, முத்தரையர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அருப்புக்கோட்டை பகுதியில் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

இதற்கு முதல்நாள் விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க., நிர்வாகிகள் சரியாக பிரசார ஏற்பாடுகள் செய்யவில்லை என்ற அதிருப்தியில் பிரசாரத்தை பாதியில் ரத்து செய்து விட்டு, ராதிகா சென்னை சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் சென்னை பா.ஜ.க., தலைமை தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து கட்டளைகள் பிறப்பித்ததன் அடிப்படையில் தற்போது ராதிகாவின் பிரசாரம் சீரான நிலையில் சென்று கொண்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது :    துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு
குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
ai in future agriculture