நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் ஓராண்டு சாதனை விளக்க கூட்டங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் ஓராண்டு சாதனை விளக்க கூட்டங்கள்

கே.ஆர்.என். ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பெதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஒரு ஆண்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி நாமக்கல் மாவட்டத்தல் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.

நாமக்கல் பஸ் நிலையம் அருகில் வருகிற 20ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், கட்சிப் பேச்சாளர்கள் செந்தூர் பாலகிருஷ்ணன், கவிதைப்பித்தன் ஆகியோர் பேசுகின்றனர். 21ம் தேதி மாலை 5 மணிக்கு ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெறும் கூட்டத்தில் குத்தாலம் கல்யாணம், தேர்தல் பணிக்குழு செயலாளர் அத்திப்பட்டுகாமராஜ் ஆகியோர் பேசுகினறனர். 22ம் தேதி காளப்பநாய்க்கன்பட்டி வ.உ.சி திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி, பேச்சாளர் உடன்குடி தனபால் ஆகியோர் பேசுகின்றனர்.

பொதுக்கூட்டங்களில், கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி கட்சி பிரமுகர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story