பூந்தமல்லி: லாரி பின்புறத்தில் டூ வீலர் மோதியதில் கல்லூரி மாணவன் பலி

பூந்தமல்லி அருகே, நின்ற லாரியை பின்புறத்தில் இருசக்கரம் வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Update: 2022-03-24 00:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன்.   இவரது மகன் ஜெயந்த்,  தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்,  தனது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கோலப்பன்சேரி சுங்கச்சாவடி நோக்கி செல்லும்போது,  முன்னே நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் பின்புறத்தில் பலமாக மோதியதில்,  பலத்த காயமடைந்து, ஜெயந்த் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News