பூந்தமல்லி பிஜேபி சார்பாக சேவா தினம் கொண்டாட்டம், கபசுர குடிநீர் முகக்கவசம் வழங்கல்

பூந்தமல்லியில் பிஜேபி சார்பாக சேவாதினம் கொண்டாடப்பட்டது. இதில் கபசுர குடிநீர், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினர்.

Update: 2021-05-30 18:37 GMT

பூந்தமல்லியில் சேவாதினம் கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜ.கவினர் முகக்கவசம், கபசுரகுடிநீர் வழங்கினர்.

பாரதிய ஜனதா கட்சித் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களது 7ஆண்டுகள் நிறைவு பெற்று 8ம் ஆண்டு துவக்க நாளை சேவா தினமாக அறிவித்து, பொதுமக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குமாறு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி பூவிருந்தவல்லி நகர தலைவர் எஸ். சரவணன் ஏற்பாட்டில் இன்று பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில் மற்றும் 20வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், பிஸ்கெட் மற்றும் ரொட்டி வழங்கினார்கள்.

Tags:    

Similar News