பூவிருந்தவல்லி: எம்எல்ஏ கிருஷ்ணசாமி தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்!

பூவிருந்தவல்லியில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-12 12:54 GMT

பூவிருந்தவல்லியில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமையில் பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நகர செயலாளர் பூவை ரவிக்குமார், அரசு அதிகாரிகள், ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News