பூந்தமல்லி: 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்- தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-11 09:37 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (49) . டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், ரமேஷ் 2 சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News