பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் திருடன் கிணற்றில் தவறி விழுந்து சாவு

பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் திருட வந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2022-04-03 03:15 GMT
இளைஞர் தவறி விழுந்து பலியான கிணறு.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே கரையான்சாவடி பக்கிங்காம் தெருவில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளை திருடபோது அந்த சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் கண்டு அந்த நபரை, அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த திருடனை துரத்தி சென்றார்

அப்போது, அருகில் இருந்த காலி மைதானத்திற்குள் எகிறி குதித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென மாயமான அந்த திருடனை பொதுமக்கள் தேடிய போது, அங்கிருந்த இருட்டில் நபர் பாழடைந்த கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசார் தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாயமான அந்த திருடனை தேடி பார்த்தனர்.

இரவு நேரம் ஆனதால் அந்த நபரை மீட்க முடியாத தீயணைப்பு வீரர்கள், காலை வந்து மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது நீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்த திருடனின் உடலை கைப்பற்றி. போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்து போன நபர் திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர்கணேஷ்( 29) என்பதும், போதையில் மோட்டார் சைக்கிளை திருட வந்த போது பொதுமக்கள் தங்களை பிடித்து அடித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் ஓடிய போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார்  வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News