புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

பூவிருந்தவல்லியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

Update: 2021-08-23 06:44 GMT

புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் புரட்சி பாரதம் கட்சியினர்.

புரட்சிபாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பாக பூவிருந்தவல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வின்சன் தலைமையில் எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம், எல்லாபுரம் மேற்கு ஒன்றியம், கும்மிடிப்பூண்டியில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களை  திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் மண்டல பொறுப்பாளர்களால் நியமித்தனர்.

Tags:    

Similar News