பூவிருந்தவல்லியில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு விநியோகம்

பூவிருந்தவல்லியில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு விநியோகத்தை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார்.

Update: 2021-12-14 02:15 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு விநியோகத்தை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு விநியோகத்தை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பூவிருந்தவல்லி நகரம், ஒன்றயம்,நசரத்பேட்டை, திருமழிசை பேரூராட்சி,ஆகிய பகுதிகளில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு வினியோகத்தை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், தேர்தல் பொறுப்பாளர்கள் கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி,பாலகங்கா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் விருப்பமானவை வழங்கி சென்றனர். முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் பூவிருந்தவல்லி நகர செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட பொருளாளர் ஜாவித் அகமது உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News