வானகரத்தில் உள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் கொரோனா இலவச தடுப்பூசி முகாம்

வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் இன்று கொரோனா வைரஸ் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-07-14 12:26 GMT

வானகரம் வேதாந்தா அகாடமி பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்.

சென்னை அடுத்த வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் திருவேற்காடு நகராட்சி சார்பில் கோவிட் - 19 இலவச தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.

இதனை  திமுக திருவேற்காடு நகர செயலாளர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.  இம்முகாமில் சுமார் 350 கோவிட் ஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பது.

இந்த இலவச தடுப்பூசி முகாமில் வானகரம் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் என 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். 

Tags:    

Similar News