நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

பூந்தமல்லி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-07 01:45 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு நேமம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி லக்ஷ்மி மகன் சாரதி,16. இவர் பூந்தமல்லி திருமழிசை அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தந்தை முரளி 4 ஆண்டுகளுக்கு முன் தந்தை இறந்த நிலையில், தாய் லட்சுமி அரவணைப்பில் வளர்ந்து வந்த மாணவன் சாரதி தன் நண்பர்களுடன் நேமம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது சேற்றில் சிக்கி மாயமானார்.

இதுகுறித்து திருவூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி சாரதியை பிணமாக மீட்டனர்.  மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்று இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News