திருமழிசை: இன்று முதல் ஜூன் 2 வரை பகல் 10-12 மின்தடை

திருமழிசை மின் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று முதல் ஜூன் 2 வரை காலை 10மணி முதல் 12மணி வரை மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Update: 2021-05-31 05:39 GMT

திருமழிசை மின் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று முதல் ஜூன் 2 வரை காலை 10மணி முதல் 12மணி வரை மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில், இன்று முதல், ஜூன் 2 வரை, மின் பராமரிப்பு பணிக்காக காலை, 10:00 - 12:00 மணி வரை மின் வினியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று: திருமழிசை, லட்சுமபதி காலனி, கொட்டாமேடு, ஸ்ரீதேவி குப்பம், பிரயாங்குப்பம், கடம்பத்துார், தண்டலம், வெண்மனம்புதுார், கசவநல்லாத்துார் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் வினியோகம் துண்டிக்கப்படும்.

ஜூன் 1 நாளை சிட்கோ / திருமழிசை, கீழானுார், விஷ்ணுவாக்கம், கரிக்கலவாக்கம், வதட்டூர், திருக்கோணஞ்சேரி, கீழச்சேரி ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் துண்டிக்கப்படும் என்றும், ஜூன் 2: திருவூர், புட்லுார், தொழுவூர்குப்பம், கோமதிபுரம், இந்திரா நகர், நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, கிளாம்பாக்கம், தொட்டிகலை, வீராபுரம், கல்யாணகுப்பம், பேரம்பாக்கம், கூவம் பேருந்து நிலையம், கொட்டையூர், காரணை மற்றும் குறுக்கம்பேடு ஆகிய பகுதிகளில் ஜூலை 2 காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் திருமழிசை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அளித்துள்ளார்.




Tags:    

Similar News