13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகர் பகுதியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை; பூந்தமல்லி போலீசார் விசாரணை.

Update: 2021-05-08 04:42 GMT

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகர் பகுதியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை; பூந்தமல்லி போலீசார் விசாரணை.

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் அஜித் (32). இவரது 13 வயது மகன் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.

இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, சமையலறையில் சிறுவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

சிறுவன் பெற்றோரிடம் மொபைல் போன் கேட்டு அடம்பிடித்து வந்ததாகவும், படிக்காமல் மொபைல் போன் கேட்டதால் பெற்றோர் கண்டித்ததாகவும் தெரியவந்துள்ளது. சிறுவன் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News