பெட்ரோல் திருடிய நபர்களை தட்டிக்கேட்ட தொழிலாளி வெட்டிக் கொலை, இருவர் கைது

பெட்ரோல் திருடிய நபர்களை தட்டிக்கேட்ட சென்ட்ரிங் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-19 06:37 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய நபர்களை தட்டிக்கேட்டார் சென்ட்ரிங் தொழிலாளி ராஜேஷ், 

ஆத்திரமடைந்த பெட்ரோல் திருடர்கள் அரிவாளால்  ராஜேஷின்  தலையில் வெட்டினர். இதில் தலையில் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலையாளிகள் இருவருவரையும் போலீசார் கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News