இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: தாய் உயிரிழப்பு; மகன் மருத்துவமனையில் அனுமதி

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தாய் உயிரிழப்பு; மகன் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-03-21 04:15 GMT

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜோதி (56) சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை தமது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மகளை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

மீஞ்சூர் அடுத்த வல்லூர் கூட்டுச்சாலையில் திடீரென லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியதில், தாய் ஜோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மகன் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் போலீசார் விபத்தில் படுகாயமடைந்த மகன் முனிகுமாரை (40) மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த தாய் ஜோதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தாய், மகன் சென்ற பைக் மீது லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்தம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News