பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை

பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-01-28 02:30 GMT

கொள்ளை நடந்த வீடு.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நெற்குன்றம், கன்னியம்பாளையம், செக்கஞ்சேரி, புதுக்குப்பம் ஆகிய அடுத்தடுத்த 4கிராமங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து 10சவரன் நகை, 2லட்ச ரூபாய் ரொக்க பணம், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரேநாளில் அடுத்தடுத்த 4கிராமங்களில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News