இறந்து கரை ஒதுங்கிய டால்பின் மீனை அடக்கம் செய்த வனத்துறையினர்

Today Thiruvallur District News in Tamil -கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பினை நடுக்கடலில் விட்ட நிலையில் இன்று ஒரு டால்பின் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Update: 2023-01-24 00:30 GMT

பொன்னேரி அருகே பழவேற்காடு முகத்துவாரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சிறிய டால்பினை வனத்துறையினர் கடற்கரையில் அடக்கம் செய்தனர்.

Today Thiruvallur District News in Tamil -பொன்னேரி அருகே பழவேற்காடு முகத்துவாரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சிறிய டால்பினை வனத்துறையினர் கடற்கரையில் அடக்கம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் அலையில் அடித்துக்கொண்டு இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் 6அடி நீளம், 100கிலோ எடை கொண்ட இறந்த நிலையில் இருந்த டால்பினை கடற்கரை ஓரத்தில் அடக்கம் செய்தனர். நேற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பினை நடுக்கடலில் விட்ட நிலையில் இன்று ஒரு டால்பின் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டால் பின் ஒன்று கரை ஒதுங்கி பழவேற்காடு அடுத்த கோரைகுப்பம் மீனவ கிராமம் அருகே டால்பின் ஒன்று கடல் அலையில் அடித்துக்கொண்டு கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மீனவர்கள் உதவியுடன், சுமார் 5அடி நீளம், 75கிலோ எடை கொண்ட டால்பினை மீட்டு படகில் ஏற்றி, நடுக்கடலில் கொண்டு சென்று விட்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News