அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா
Temple Brahmotsavam Function பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.;
Temple Brahmotsavam Function
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவில் சிவபெருமான் பார்வதி தாயாருடன் நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.அகத்திய மாமுனிவர் இத்தலத்திற்கு வருகை தந்து ஈஸ்வரனை போற்றிப்பாடியதால் சிவபெருமானுக்கு அகத்தீஸ்வரர் என பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.
இவ்வளவு சிறப்புவாய்ந்த இக்கோவிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மூன்றாம் நாள் பூத வாகனத்திலும், 4ஆம் நாளான நேற்று இரவு நாக வாகன வீதிவுலா நடைபெற்றது. முன்னதாக அகத்தீஸ்வரருக்கும் ஆனந்தவல்லி தாயாருக்கும் பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், இளநீர், பன்னீர், மஞ்சள், குங்குமம், இளநீர் உள்ளிட்ட வாசன திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டு உடைகளாலும், திரு ஆபரணங்களாலும், வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.
புஷ்பரத ஆராதனை மற்றும் மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க பார்வதி தேவியுடன் எழுந்தருளிய சிவபெருமான் நாக வாகனத்தில் வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பொன்னேரி சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் பின்னர் ஆலயத்தின் சார்பில் அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.