கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறப்பு விருது: ஆட்சியர் வழங்கல்

கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு விருது வழங்கினார்.

Update: 2021-09-11 12:42 GMT

கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு விருது வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்ப்பட்ட கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விருதுகளை வழங்கினார். கொரோனா பெருந்தொற்று மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிலிருந்து பொதுமக்களை மீட்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் ஊராட்சி தலைவர் மூலம் அவர்களுடைய ஊராட்சிகளில் உட்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் முகாம்களை ஏற்பாடு செய்து மக்களுக்கு தடுப்பூசி போட்டு தொற்றிலிருந்து மீட்டு வருகிறது.

அதற்கான பணிகளை சிறப்புடன் செய்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 100% கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வைத்த கொண்டகரை மனோகரன் தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருதினை வழங்கினார்.

அவர்களுடன் மீஞ்சூர் வட்டார தலைமை மருத்துவர் ராஜேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் அரிகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முருகன், இதேபோன்று சுப்பா ரெட்டி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவம் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருது வழங்கினார்.

Tags:    

Similar News