வாக்குச்சாவடி மையத்தில் கோட்டாட்சியர் ஆய்வு

Update: 2021-04-06 12:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியை பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் ஆய்வு செய்தார்.

நடைபெறுகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தும் பணி பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் பொன்னேரி கோட்டாட்சியருமான செல்வம் வாக்கு செலுத்தும் பணி சரியான முறையில் நடைபெறுகிறதா என்று நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்டார்.

Tags:    

Similar News