பேரறிவாளன் விடுதலை: பொன்னேரியில் காங்கிரஸ் சார்பில் மெளன போராட்டம்

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் சார்பில் மெளன போராட்டம் நடந்தது.

Update: 2022-05-23 02:15 GMT

பேரறிவாளன் விடுதலை சிறுத்தைகள் கண்டித்து பொன்னேரியில் காங்கிரசார் மவுன போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு மெளனப் போராட்டம் நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்..ஏ துரை சந் திரசேகர் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News