மகள் காணாமல் போனதால் பெற்றோர் தவிப்பு

எடப்பாளையம் கிராமத்தில் பிஸ்கட் கம்பெனிக்கு சென்று வருவதாக கூறிய மகள் காணாமல் போனதால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்.

Update: 2021-04-07 08:25 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் தனம்மாள் என்பவருடைய மகள் சரஸ்வதி (24) வயது என்பவர் 5.4.21 அன்று, காலை 8.30 மணி அளவில் பிஸ்கட் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மாலைவரை வீடு திரும்பாததால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. உடனடியாக சோழவரம் காவல் நிலையத்தில் பெற்றோரால் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News