அகத்தீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

Update: 2023-03-29 03:30 GMT

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயிலில்  நடைபெற்ற பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்ற விழா

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கும்மமுனிமங்களம் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அகத்திய மாமுனி இத்தலத்திற்கு வருகை தந்து ஈஸ்வரனை போற்றிப் பாடிய வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ பெருவிழா காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

முன்னதாக விநாயக பெருமானுக்கும் அகத்தீஸ்வர பெருமானுக்கும் ஆனந்தவள்ளி தாயாருக்கும் அதிகாலை பால் தயிர் சந்தனம் இளநீர் ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் பட்டு உடைகளாலும் அலங்காரம் செய்து தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க வேதமந்திரங்கள் ஓதியபடி சிவாச்சாரியார்கள் கொடிப்பட்டத்தை கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர். இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தி மகாதீபாராதணை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சிவபெருமான் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமான் அகத்தீஸ்வரரை தரிசித்து சென்றனர் அங்கு வந்த திருடன் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது மிகச் சிற்காண ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள்  செய்திருந்தனர்.




Tags:    

Similar News