மெதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா
மெதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.;
பொன்னேரி அருகே மெதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் (பொறுப்பு) நர்மதா தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், மருத்துவர்கள் மாணிக்கம், நிஜந்தன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை அம்பத்தூர் கேன் பின் ஹோம் லிமிடெட் தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரி சிவசங்கரன், மேலாளர் தீபன்சக்கரவர்த்தி , ஊழியர் சிரஞ்சீவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மருத்துவத்திற்கு வேண்டிய சுமார் பத்து லட்சம் மதிப்புள்ள பிளட் கவுண்டிங் சோலார் பேனல் ,மற்றும் இசிஜி இயந்திரம் உள்ளிடவைகளை வழங்கினர். இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் சமூக ஆர்வலர் எம்.பி. சேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.