பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ விழா
பொன்னேரி அருகே பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.;
பொன்னேரி அருகே பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ விழா நடந்தது.
பொன்னேரி அருகே பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மார்கழி மாத பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டி கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திரு கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் நேற்று மாலை மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அகத்தீஸ்வர பெருமானுக்கு அதிகாலை பல்வேறு அபிஷேக அலங்காரத்துடன் விஷேச வழிபாடு நடத்தப்பட்டது.விழாவின் சிறப்பம்சமாக ஆலயத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், பன்னீர், திருநீர்,இளநீர் உள்ளிட்ட வாசன திரவங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.பின்னர் ஆலயத்தில் உள்ள மூலவர் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து சிவபெருமான் மூன்று முறை ஆலய பிரகாரவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மஹா பிரதோஷ விழாவில் பொன்னேரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசனம் செய்து சென்றனர். ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது விழாவின் சிறப்பம்சமாக 20க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற நாதஸ்வர கச்சேரி பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்தது.