ஆரணி ஆற்றில் அழுகிய நிலையில் ஆணின் உடல் மீட்பு

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் அழுகிய நிலையில் ஆணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-12-21 06:30 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த ஆரணி சுப்பிரமணிய நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38) இவர் வீடுகளுக்கு வர்ணம் பூசும் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் இவர் வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கக்கோரி வீட்டில் தகராறு செய்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இரவு வரை வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் சுற்றுவட்டார பகுதிகளில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் ஆரணி ஆற்றில் (38.வயது மதிக்க தக்க நபர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் 3மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போன நபர் 5.நாட்களுக்கு முன் காணாமல் போன ஆரணி பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் கிருஷ்ணமூர்த்தி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News