வேதமூர்த்தி வினாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

பொன்னேரி அருகே வேதமூர்த்தி வினாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-04-28 00:45 GMT

பொன்னேரி அருகே பழமை வாய்ந்த வேதமூர்த்தி வினாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் கிராமத்தில் பழமைவாய்ந்த வேதமூர்த்தி வினாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் பக்தர்கள் பங்களிப்புடன் கோவிலை புதுப்பிக்கப்பட்ட நிலையில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெற்றது.

யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவில் கோபுரத்தின் கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தீப துவ ஆராதனை காண்பிக்கப்பட்டது

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை உற்சவர் முக்கிய வீதிகளில் உலா வந்தன அப்பகுதி கிராம மக்கள் சுவாமிக்கு பூ பழம் தேங்காய் என சமர்ப்பித்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News