கும்மனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இளைஞர் பலி

கும்மனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இளைஞர் பலியானார்.

Update: 2021-05-03 05:58 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த கும்மனூர் கிராமத்தில் வசிப்பவர் கலா. இவரது மகன் கவிராஜ் (22). சம்பவத்தன்று இவர். காலைக்கடனை முடிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பாம்பு கடித்தது. அவர் உடனடியாக கூச்சல் எழுப்பனார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News