பொன்னேரியில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம்

பொன்னேரியில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-11 05:01 GMT

பொன்னேரியில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கியும், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் மாபெரும் பொதுக்கூட் டம் பொன்னேரி ஹரிகரன் பஜார் வீதியில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும் மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. வு மான டி.ஜே. கோவிந்தராஜன், தலைமை தாங்கினார் மீஞ்சூர் வட க்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளரும் எம்.பி. யுமான ஆர். எஸ். பாரதி தலைமை கழக பேச்சாளர் அமுதரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் தி.மு.க. உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் கி. வேணு மாவட்ட சேர்மன் உமாமகேஸ்வரி மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர, பிற அணி நிரவாகிகள் மாவட்ட ஊரா ட்சி குழு உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

முடிவில் மாவட்ட பிரதிநிதி வாசு தேவன் நன்றி கூறினார். முன்னதாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News