பொன்னேரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் ஆலோசனை

பொன்னேரியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை நடத்தினர்.

Update: 2022-01-21 02:45 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, பொன்னேரியில்  காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,  பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பொன்னேரி நகராட்சி தேர்தலில் கூட்டணி கட்சியினரிடம் எந்தெந்த வார்டுகளை கேட்பது, கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து,  அப்போது விவாதிக்கப்பட்டது. பொன்னேரி நகராட்சியை முழுமையாக கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினர் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்,  நிர்வாகிகளிடம் கேட்டு கொண்டார்.

Tags:    

Similar News