ஆரணியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு காங்கிரசார் மலர் மாலை அணிவிப்பு
ஆரணியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு காங்கிரசார் மலர் மாலை அணிவிப்பு;
ஆரணியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா ஆரணி பேரூராட்சிக்குட் பட்ட பேருந்து நிலையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி யின் நினைவு தினத்தை யொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஆரணி பேரூராட்சி துணைத்தலைவரும், காங்கிரஸ் நகர தலைவருமான வழக்கறிஞர் சுகுமாரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அருண்,நகர துணைத்தலைவர் குப்புசாமி,நகர செயலாளர் துளசி, மற்றும் நிர்வாகிகள் குமார்,மாரி, கருணாகரன்,முருகன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.