கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வடசென்னை அனல் மின் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-28 07:35 GMT

வடசென்னை அனல் நிலையம் முன் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலைய வாயிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பணப்பயன்களை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலைய வாயிலில் சிஐடியு தொழிற்சங்கத்தின் ஒரு அங்கமான தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும், மின் வாரியமும் நிறைவேற்றிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 32000 காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், மின்வாரிய தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் பணப்பயன்களை காலதாமதமின்றி விரைந்து வழங்கிட வேண்டும், மின்வாரியத்தை பிரித்து தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் ஜூலை மாதம் 9ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News