பழவேற்காடு முகத் துவாரத்தில் படகு விபத்தில் மீனவர் பலி
பழவேற்காடு முகத் துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், மீன் பிடிக்க சென்ற மீனவர் பலியானார்.;
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு திருமலை நகரை சேர்ந்த அர்ஜுனன், மீனவர். இவர், தமது படகில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்றார். வங்கக்கடலில் மீன் பிடித்து கொண்டு, பழவேற்காடு முகத்துவாரம் அருகே வந்தபோது, படகு கவிழ்த்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், அர்ஜுனன் கடலில் மூழ்கி மாயமான நிலையில், சக மீனவர்கள் அவரை நீண்ட நேரம் தேடி வந்தனர். சுமார் 8மணி நேரத்திற்கு பிறகு, மீனவர் அர்ஜுனன் சடலம் கரை ஒதுங்கியது. மீனவரின் சடலத்தை கைப்பற்றிய திருப்பாலைவனம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.