ஆரணி பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டம்

ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என கவுன்சில் கூட்டத்தில் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-06-01 03:15 GMT

ஆரணி பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சி மன்ற கூட்டம், மன்ற வளாகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காவிரி பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அனைத்து கவுன்சிலர்கள் பேசுகையில் ஆரணி பேரூராட்சியில் நீண்ட வருட காலமாக பேருந்து நிலையம் இல்லாத காரணத்தினால், விவசாயம் ஜவுளி துறையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான ஆரணி பேரூராட்சிக்கு தற்போது வரை பேருந்து நிலையம் இல்லை என்றும், இதனை உடனடியாக இடம் தேர்வு செய்து பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திமுக கவுன்சிலர்கள் கண்ணதாசன், பொன்னரசி, ரகுமான்கான், திமுக, அதிமுக கவுன்சிலர் சந்தான லட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் சதீஷ், முனுசாமி, குமார், இளநிலை உதவியாளர் முருகவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News