ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-03 04:00 GMT
மது பாட்டில்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட விக்னேஷ்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி பகுதியில் நேற்று மாலை  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமர பேட்டை யிலிருந்து ஆரணி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்ததில் 130 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது .இதனைக் கொண்டு வந்த கன்னிகை பேர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது25) என்பவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.  மது பாட்டில்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட  வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News