குடியிருப்பு மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழந்தார்

Update: 2021-01-20 02:30 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக குடியிருப்பில் ஓய்வு பெற்ற ஊழியர் ஜோதி மாரியம்மாள் தமது குடும்பத்துடன் இருந்து வருகிறார். டிராக்டர் மெக்கானிக்கான அவரது மகன் சுகுமார்(30) என்பவர் 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார் இது குறித்து பொன்னேரி காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், சுகுமாரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதனைதொடர்ந்து, சுகுமார் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News