12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது

மாநெல்லூர் ஊராட்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-21 14:43 GMT

திருவள்ளூர் மாவட்டம், குடிப்பூண்டி அடுத்த சத்தியவேடு பகுதியை சேர்ந்த தசரதன் என்ற முதியவர். இவர், மாநெல்லூர் ஊராட்சியை சேர்ந்தவர்  12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இன்று புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தசரதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News