பட்டப்பகலில் மணல் கடத்தல்; இருவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த ராமையாபாளையம் கிராமத்தில் பட்டப்பகலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.;
மணல் கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ராமையாபாளையம் கிராமத்தில் இன்று மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு டாக்டர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ராமையா என்பவரின் மகன் கோதண்டம் (54), கண்ணன் என்பவரின் மகன் விநாயகம் (48) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.