கும்மிடிப்பூண்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கும்மிடிப்பூண்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-09-06 07:15 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பெத்தி குப்பம் பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே அழுகிய நிலையில் ஆண் படலம் ஒன்று கிடப்பதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் பார்த்தபோது அழகிய துர்நாற்றம் வீசும் நிலையில் ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூரில் இருந்து தடவியல் நிபுணர்களை வரவைத்து பரிசோதனை செய்தனர்.

அப்போது இறந்து கிடந்த நபரின் கயிற்று பகுதியில் பலமான வெட்டு காயம் இருந்தது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. இறந்து போனவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் குடும்பத்த தகராறு காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்து கொண்டு வந்து இங்கு வீசி விட்டு சென்றாரா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News