கன்னிகைபேர்: அன்னை தெரேசா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

அன்னை தெரேசா கல்வி, மருத்துவம், விளையாட்டு அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.;

Update: 2021-08-27 15:37 GMT

கன்னிகைபேரில் அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு அன்னை தெரேசா கல்வி மருத்துவம் விளையாட்டு அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்டங்களை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் இளவரசி வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் பகுதியில் இயங்கிவரும் அன்னை தெரசா கல்வி மருத்துவம் விளையாட்டு சமூக அறக்கட்டளையின் சார்பில் அன்னை தெரேசா அவர்களின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு அறக்கட்டளையின் தலைவர் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் இளவரசி அன்னை தெரேசா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் அக்கறைபாக்கம் பகுதியில் வாழும் ஏழை மக்களைத் தேடிச் சென்று உணவை வழங்கினார். ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் முதியோர்களுக்கு புடவை உள்ளிட்டவை வழங்கினார். இதில் அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவக்கம் ரகு, பொருளாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News