கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-04-03 04:59 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிபெத்திக்குப்பம் பகுதியில், போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஆந்திராவில் இருந்து, சென்னை நோக்கி வந்த லாரியில் வந்து இறங்கிய நபரை, போலீசார் சந்தேகத்தின்பேரில், விசாரித்தனர்.அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.

அதில் இருந்த, ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரித்ததில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் பாஸ்வான், (50,) என்பதும், இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த, பாப்பான்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News