பெரியபாளையம் அருகே கோதண்டராம சுவாமி கோவில் தேர்த்திருவிழா

பெருமுடிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது

Update: 2022-05-15 03:00 GMT

 கோதண்டராம சுவாமி கோவிலில் தேர் திருவிழாவில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

பெருமுடிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருமுடிவாக்கம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திரு கோவில் உள்ளது.  இக்கோவிலில் கடந்த 7ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமிக்கு கோவிலில் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.

கடைசி நாளன்று தேர்த்திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு தேரை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு உற்சவரை முக்கிய வீதி வழியாக உலா வந்தன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து கோவிந்தா என்ற கோஷம் எழுப்பி தேர் இழுத்தனர். 

இதில் பெருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பால லட்சுமி வெங்கடேசன், துணைத் தலைவர் சேதுராமன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் பொன்னுசாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆலயத்தின் சார்பில் நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிரிதரன் அய்யங்கார் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Tags:    

Similar News