கும்மிடிப்பூண்டி: ஆந்திர லாரியை திருட முயன்ற வாலிபர் கைது!

கும்மிடிப்பூண்டி அடுத்த கே.என். பேட்டையில் ஆந்திரா பதிவு எண் கொண்ட வாகனத்தை திருட முயன்ற வாலிபர் கைதானார்.

Update: 2021-05-29 15:33 GMT

ஆந்திரா லாரியை திருட முயன்றதாக கைதான வாலிபர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கே.என். பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரியை திருட முயன்ற 18 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிடிபட்டார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாதிரிவேடு காவல் நிலைய காவலர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News