மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ

கும்மிடிப்பூண்டி அருகே மாதர் பாகத்தில் தண்ணீர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

Update: 2024-05-05 09:27 GMT

மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ.

மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெ.மோகன் பாபு ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்து பழச்சாறு நீர்,மோர் உள்ளிட்டவை வழங்கினார்.


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கம் பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாதர்பாக்கம் ஜெ.மோகன் பாபு ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் மணிபாலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட  தி.மு.க.  செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மாதர் பாக்கம் பகுதியில் உள்ள கடை வியாபாரிகளுக்கும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நீர், மோர், தர்பூசணி, பழச்சாறு உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முரளி, பாஸ்கர், இளைஞர் அணியைச் சேர்ந்த சுரேஷ், எஸ்வந்த், மஸ்தான், லோகேஷ், மற்றும் மோகனசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் அதிமுக கிளை செயலாளர் ராஜா தன் குடும்பத்துடன் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Tags:    

Similar News