பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரியபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-29 09:41 GMT

பெரிய பாளையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர்  உத்தரவின்பேரில் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் பொது சுகாதார நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக மனித சங்கிலி நிகழ்ச்சி பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் சுகாதாரப் பகுதி மாவட்டத்தின் கீழ் செயல்படும் எல்லாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மாவட்ட சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியாராஜ் அறிவுறுத்தலின் பேரில் மனித சங்கிலி மூலம் அனைவரும் வாக்களிப்போம் , 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்வோம் என முதன் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கீதா தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் , மக்களை தேடி மருத்துவத்தில் பணிபுரியும் பெண் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கினர்.

Tags:    

Similar News